பக்கங்கள்

02 ஜூலை 2010

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களை மீட்க அமெரிக்கா முயற்சித்தது.



அமெரிக்கக் கடற்படையினர் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களை பாதுகாப்பதற்கு முயற்சித்ததாக சென்னையைச் சேர்ந்த மதகுருவான பிதா கஸ்பார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பெக்கோமா இராணுவத் தலைமையகத்திலிருந்து கடற்படைக் கப்பல் ஒன்றை முல்லைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்று இருந்ததாக கஸ்பார் பிதாவை ஆதாரம் காட்டி திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அமெரிக்கத் தலையீட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு பிரான்ஸ் நாட்டு அரசாங்கமும் ஆதரவளித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீட்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.