பக்கங்கள்

28 ஜூலை 2010

யாழில் தமிழ் மக்களை ஏமாற்றும் சிங்கள கும்பல்.

வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் போதும் என்று சொல்லி முழுத் தொகை பணத்தையும் வாங்கி கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் எதுவித தொடர்புமில்லாமல் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
தூதரகங்களினால் தற்போது சகல வகையான விசாக்களும் கூடுதலாக மறுக்கப்படுகின்றன, இது தெரியாமல் எம்மக்களும் அங்கு சென்று தமது கடவுச்சீட்டில் மறுபடியும் விசா மறுப்பு முத்திரை பெற்று வரவேண்டியேற்படுகின்றது.
இந்த ஏமாற்றுக் கும்பல் ஒன்று தற்போது திருநெல்வேலி பலாலி வீதியில், தபால்பெட்டி சந்தியில் வோயோகுஸ் லங்கா (voyogus lanka) எனும் பெயரில் இயங்குகிறது,
மக்களே! இந்த மாதிரி ஏமாற்று கும்பல்களிடம் விழிப்பாக இருங்கள்.
எம் முன்னேற்றத்தின் முட்டு கட்டைகள் இவர்கள் தான், நாம் இதுவரை இழந்தது போதும், உயிர் முதல் உடமை வரை சிங்களவன் எம்மிடம் புடுங்கியே பழகி விட்டான்.
தற்போது சிங்களவன் புது விதமாக தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முனைகிறான், விழிப்போடு இருங்கள்.
பாதிக்கப்பட்ட நபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.