பக்கங்கள்

28 ஜூலை 2010

தர்சிகாவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது.




யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மகள் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தர்ஷிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் சந்தேகநபரான சிங்கள வைத்தியர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.