பக்கங்கள்

10 ஜூலை 2010

இன்றைய ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்கிறது கணவாய்!


இந்த முறை உலக கோப்பை கால்பந்தில், வீரர்கள் பற்றிய பேச்சை விட, ஜெர்மனி அருங்காட்சியகத்தின் ஆக்டோபஸ் பால் பற்றிய பேச்சே அதிகம். இதுவரை அது கணித்த 6 அணிகள் வென்றன. இறுதி போட்டியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் நாளை மோதுகின்றன. அதில் கோப்பையை ஸ்பெயின் வெல்லும் என்று ‘பால்’ நேற்று சொல்லி விட்டது. இந்நிலையில், ஜெர்மனி ரசிகர்களின் மிரட்டலால், பாலுக்கு பாதுகாப்பு தர தயார் என்று ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் ஜாபடேரோ நேற்று தெரிவித்தார். இன்று இரவு ஜெர்மனி -உருகுவே இடையே நடைபெறும் 3வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி வெல்லும் என்று கூறி தாய்நாட்டு ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளது ‘பால்’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.