பக்கங்கள்

10 ஜூலை 2010

சிங்கள வைத்தியர் தாதியை படுகொலை செய்தார்,வேலணையில் பதற்றம்!






இது தொடர்பில் கிடைத்த தகவலின் படி,குறித்த சிங்கள வைத்தியர் குறித்த பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலணை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிய குறித்த பெண்ணை சில நாட்களாக குறித்த சிங்கள வைத்தியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிவந்துள்ளார்.இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் உள்ள ஓய்வு அறையில் உள்ள மின்விசிறியில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் ஆரம்பத்தில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அது கொலை என தெரியவரவே வைத்தியசாலையினை முற்றுகையிட்டு பொதுமக்கள் வைத்தியருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.எனினும் அவ்விடத்துக்கு வந்த படையினரும் பொலிஸாரும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்தியர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொலைச்சம்பவத்தை தற்கொலையென பதிவுசெய்ய பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.