பக்கங்கள்

02 ஜூலை 2010

மாவோயிஸ்டுக்களின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை என்கிறது ஆந்திர காவல்துறை.


ஆந்திர மாநில பொலிசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சண்டையில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரத்திலிருந்து மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழு ஆந்திரத்துக்கு ஊடுருவுவதாக அம் மாநில பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வாங்கிடி வனப் பகுதியில் பொலிசார் பதுங்கியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிரவாதிகளை எதிர்கொண்ட பொலிசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் சண்டை நீடித்தது.
இதில், மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் ராஜ்குமார் என்ற ஆசாத் உள்பட இரு தீவிரவாதிகள் இறந்தனர்.
எம்.டெக். பொறியியல் முதுநிலை பட்டதாரியான ஆசாத், 1970-ல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.
சண்டையின்போது, மாவோயிஸ்டுகளில் சிலர் சரண் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகாரில் நக்ஸல் தலைவர் கைது: பிகாரில், ஜெகனாபாத் மாவட்டத்தில், நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரதுமன் சர்மா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ரஸ்தாபூர் கிராமத்தில், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் "வரிவசூல்' என்ற பெயரில் பணம் பறித்துக் கொண்டிருந்தபோது அதிரடிப் படை பொலிசார் அவரைக் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.