பக்கங்கள்

04 ஜூலை 2010

பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மட்டக்குளியில் மோதல்!




கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் மட்டக்குளி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று தற்போது நிலவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள ஒருவரை கைது செய்து தாக்கியதில் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே, பொது மக்கள் காவற்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கலைக்க முயன்ற காவற்துறையினரை பொது மக்கள் தாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அங்கு 10க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்ற போதும், தொடர்ந்தும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், காவற்துறையினர் தண்ணீர் பம்பி வண்டிகளும், இராணுவ ட்ரெக் வாகனங்களும் அந்த பிரதேசத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
தற்போது மட்டக்குளி செல்வதற்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.