பக்கங்கள்

14 ஜூலை 2010

அமெரிக்க கடற்படை கப்பல் சிறிலங்கா சென்றுள்ளது.


ஐக்கிய அமரிக்காவின் கடற்படை கப்பலான ‘யூஎஸ்எஸ் பேர்ல் ஹார்பர்” நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டே இந்த விஜயத்தை அமரிக்க கப்பல் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
186 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் 11 ஆயிரத்து 251 டன் நிறையை ஏற்றிச் செல்லக்கூடியது.
இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உட்பட 328 கடற்படை வீரர்கள் பயணிக்கின்றனர்.
இதேவேளை, இந்த கப்பலின் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படைத்தள வீதியில் உள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு நேற்று விஜயம் செய்த அவர்கள் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமாக சீனாவும் இந்தியாவும் மௌனம் காத்து வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.