பக்கங்கள்

24 ஜூலை 2010

நெடுந்தீவு கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்.


நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனம் தெரியாத சடலம் ஒன்று தலை வெட்டப்பட்ட நிலையில் கடற் தொழிலுக்குச் சென்ற மீனவாகளினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நெடுந்தீவுப் பொலிசாருக்கு மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் உரிய இடத்திற்க்குச் சென்ற பார்வையிட்டதடன் ஊர்காவற்துறை நீதிபதி இ.வசந்த சேனனின் கவனத்திற்க்கு கொண்டுவந்தார்கள்.
ஊர்காவற்துறைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட நீதிபதி சடலத்தை அடையாளம் கானும் முகமாகவும் பிரேத பரிசோதனைக்காகவும் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி கட்டளையிட்டதன் பெயரில் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . சுமார் 40 வயது மதிக்கத் தக்கவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.