பக்கங்கள்

30 ஜூலை 2010

செந்தமிழன் சீமானுக்கு சிறையில் அடாவடி.


சென்னையில் நடந்த தமிழக மீனவர் படுகொலை கண்டன கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தனிமை சிறையில் அடைத்துள்ளார்கள். வாக்கிங் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்று சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் சீமான், சிறையில் யாருடனும் அதிகம் பேசக்கூடாது என்று சிறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். சிறையில் உள்ள புத்தக லைப்ரரிக்கு சென்று புத்தகம் படிக்க கூட சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வேலூர் சிறையில் முதலில் விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்ட போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அதே சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்து பேசி வந்தார் சீமான்.
ஆனால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததில் இருந்துதான் சிறையில் இப்படியான நெருக்கடி அதிகமாகிக்கொண்டே போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.