பக்கங்கள்

20 ஜூலை 2010

குஷ்பு பேசியதை நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


ஈரோட்டில் மதிமுக தொண்டரணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. மதிமுகவின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர்,’’செம்மொழி மாநாட்டில் உண்மையான கவிஞர்களை அழைக்கவில்லை. ஜால்ரா அடிக்கும் சிலரையும், குடும்ப அங்கத்தினரையும் வைத்து நடத்தினர். இதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது’’என்று பேசினார்.
அவர் மேலும், ‘’கற்பை பற்றி கேவலமாக பேசிய குஷ்பு, திமுக கொள்கையுடன் எனது கொள்கையும் ஒத்துப் போனதால் அந்த கட்சியில் இணைந்ததாக கூறுகிறார். இதை நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.