பக்கங்கள்

07 ஜூலை 2014

வீட்டுக்குள் கூத்தடித்த மகனுக்கு மண்டையை பிளந்த தந்தை!

நயினாதீவு உற்சவத்திற்கு வீட்டில் உள்ளவா்கள் சென்றதைப் பயன்படுத்தி தென்பகுதியைச் சோ்ந்த தனக்குப் பழக்கமான யுவதி ஒருவரை வீட்டில் அழைத்து வந்து சல்லாபம் புரிந்த இளைஞா் ஒருவா் தந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த ஞாயிற்குக் கிழமை கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்பகுதிப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த இளைஞன் ஒருவா் கடந்த வாரம் இறுதியில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவா் யாழ்ப்பாணம் வரும் போது சிங்கள நண்பிகள் சிலரையும் அழைத்து வந்து இன்னொரு உறவினா் வீட்டில் தங்க வைத்துள்ளார். அவா்களும் நயினாதீவு செல்வதற்கு இளைஞனுடன் வந்ததாகத் தெரியவருகின்றது. தன்னுடன் வந்த சிங்கள யுவதிகளை தனது குடும்பத்தினருடன் நயினாதீவுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனக்கு வேலைகள் சில இருப்பதாகக் கூறி கோவிலுக்குப் போகாது இளைஞா் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதே நேரம் இளைஞனுடன் வந்த யுவதிகளில் ஒரு யுவதியும் தான் யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரைச் சந்திக்கச் செல்ல வேண்டியிருப்பதால் கோவிலுக்கு வரமுடியாது எனத் தெரிவித்து குடும்பத்தினா் கோவிலுக்குச் சென்ற வாகனத்தில் ஏறி யாழ் நகரப் பகுதியில் இறங்கியுள்ளார். இதன் பின்னா் இளைஞன் குறித்த யுவதியை யாழ் நகரில் இருந்து ஏற்றி வந்து தனது வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இளைஞனும் யுவதியும் மதுவும் அருந்தியுள்ளனா். இதன் பின்னா் இவா்கள் அடித்த கூத்து அயலில் உள்ளவா்களுக்கு தெரியும்படியாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் யுவதி மது போதையில் உச்ச குரலில் சிங்களப் பாட்டுப் பாடியபடி நிர்வாணமாக முற்றத்திற்கு வந்ததையும் அயலில் உள்ளவா்கள் அவதானித்துவிட்டு கோவிலுக்குச் சென்ற தந்தைக்கு தொலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளனா். கோவிலில் நின்ற குடும்பத்தினா் இடை நடுவில் வெளியேறி வீட்டுக்கு வந்தபோது அங்கு இருவரும் நிர்வாண நிலையில் கடும் போதையில் மயக்க நிலையில் கட்டிலில் கிடந்துள்ளனா். இதனால் கடும் கோமடைந்த தந்தை மகனை எழுப்பி தாக்குதல் நடாத்தியுள்ளார். மகனுக்கு அடி விழும் போது கண் விழித்த யுவதி நிர்வாணமாக வெளியே ஓடிவந்ததாகவும் இதனை மற்றைய சிங்கள நண்பிகள் தடுத்து நிறுத்தி அவா்களும் யுவதியைத் தாக்கி உள்ளே கொண்டு சென்றுள்ளனா். தாய் மற்றும் சகோதரிகள் தடுக்கத் தடுக்க மகனுக்கு தந்தை நடாத்திய அபிசேகத்தில் மகனின் தலையில் காயமேற்பட்டு இரத்தம் வழிந்துள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட அயலவா்கள் தந்தையை மறித்து மகனை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.