பக்கங்கள்

31 ஜூலை 2014

மனைவியை படுகொலை செய்து தானும் தற்கொலை!

குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வவனியா மாகாரம்பைக்குளத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீ.வெள்ளைச்சாமி (வயது-65), இவரது மனைவியான வெ.கிருஸ்ணவேணி(வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியையும் படுகாயப்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படுபவரான செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.