பக்கங்கள்

12 ஜூலை 2014

சேட்டை விட்டவனுக்கு வேலணையில் வைத்து சாட்டையடி!

நேற்று நயினாதீவில் இடம் பெற்ற தோ் உற்சவத்தின் பின்னா் தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் நோக்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த யுவதியுடன் அங்க சேஷ்டை செய்த இளம் நபா் பேரூந்தில் பயணம் செய்தவா்களால் இறக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வேலணைப் பகுதியை பேரூந்து அண்மித்துக் கொண்டிருந்த போதே இவா் பேரூந்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். குறித்த நபா் பயணிகளின் நெருக்கத்தைப் பயன்படுத்தி யுவதியுடன் மிகவும் அங்க சேஷ்டை செய்யத் தொடங்கியதாகவும் இதனால் கோபமடைந்த யுவதி குறித்த நபரை அதற்குள் வைத்தே அடித்ததாகவும் தெரியவருகின்றது. இதனால் கோபமடைந்த நபா் யுவதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து யுவதியின் தாயும் அலறவே பஸ்சுக்குள் நின்ற இளைஞா்கள் குறித்த நபரைக் கீழே இறக்கி நையப்புடைத்துள்ளனா். இதன் போது குறித்த நபரின் பெறுமதி மிக்க கைத் தொலைபேசியும் நொருங்கியுள்ளது. இதன் பின்னா் இவரைப் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது குறித்த நபா் அழுது புலம்பவே அவனை அங்கேயே விட்டு விட்டு பேரூந்து சென்றதாகத் தெரியவருகின்றது. இந் நபா் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை செய்வதாக இளைஞா்கள் விசாரித்த போது தெரிவித்துள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.