காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிங்கள கடற்படைக் காமுகனால் சிறுமிகள் இருவர் பாலியல் வல்வுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஊரிக்கிராம மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.