பக்கங்கள்

24 ஜூலை 2014

கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ். குருநகர்ப் பகுதியியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 23) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர், அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த பெண் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸாரை விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.