பக்கங்கள்

04 ஜூலை 2014

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்!

சிறீலங்கா படைகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டாம் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக கவன யீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கவனஈர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.