பக்கங்கள்

26 ஜூலை 2014

"மாறுதடம்"திரைப்படத்தை இடை நிறுத்தினர் பொலிசார்!

யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் நேற்று மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர் என்று அந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ளது. 'மாறுதடம்' திரைப்படம் புலம்பெயர் வாழ். மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும் அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை என்றும் ரமணன் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம் அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர்.இது குறித்து பொலிசாருடன் படக்குழுவினர் பேசி வருவதாக மேலும் அறிய
முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.