பக்கங்கள்

28 ஜூலை 2014

யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் மாணவரிடையே மோதல்!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கிடையே இன்று திங்கட்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தில் மாணவி உட்பட மூவர் காயமடைந்தனர். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.