பக்கங்கள்

29 ஜூலை 2014

தீவகத்தில் சிறுவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான இரு சிறுவர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் குறித்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நயினாதீவுப்பகுதியில் வைத்து காணாமல்போன பொருள் ஒன்றைத் திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களுகம் யாழ். சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு காவல்துறை கண்காணிப்பினில் வைக்கப்பட்டபோது இரு சிறுவர்களும் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே இவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவினில் அடாவடி செய்து வரும் நாகவிகாரையின் பிக்குவின் புகாரிலேயே சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.