பக்கங்கள்

30 ஜூலை 2014

சுன்னாகத்தில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

சன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார்(வயது - 37) என்பவரே படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- சுன்னாகம் நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் தனது கடையைப் பூட்டிவிட்டு நேற்று இரவு 9 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது முகத்தை துணியால் மூடிக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். சுன்னாகத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.