பக்கங்கள்

05 ஜூலை 2014

யாழில் போலீஸ்காரனுக்கு செம அடி!

யாழ்.நகரப் பகுதியில் பெண்களிடம் அங்க சேட்டை புரிந்த சிறிலங்கா போலீஸ்காரன் ஒருவன் பொது மக்களால் நைய்யப்புடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்.மத்திய கல்லூரியில் இன்று எல்லே போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான பாதுபாப்புக் கடமைக்கு சிறிலங்கா பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிவில் உடையில் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா போலீஸ்காரன் ஒருவன் இன்று மாலை 6 மணியளவில் யாழ்.பொது நூலத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியால் சென்ற பெண் ஒருவரிடம் அங்க சேட்டை புரிந்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பெண்ணிடம் அங்க சேட்டை புரிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த சிறீலங்கா போலீஸ்காரனை மடக்கிப் பிடித்து நைய்யப்புடைத்துள்ளனர்.இதனால் காயமடைந்த சிறீலங்கா போலீஸ் அதிகாரி சிசிக்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.