பக்கங்கள்

30 ஏப்ரல் 2014

திருமலைக் கூட்டத்தில் அனந்தியை தாக்கிய சம்பந்தன்,சுமந்திரன் கூட்டணி!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இன்று காலை திருகோணமலைக் கூட்டம் தொடங்கியதில் இருந்து ,கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கட்சித் தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பாக, திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அனந்தி விளக்க அறிக்கை ஒன்றை வாசிக்க முற்பட்டார். அவ்வேளையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதி தந்தவற்றை இங்கு வாசிக்க வேண்டாமென தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாமல் அனந்தி தொடர்ந்தும் வாசிக்க முற்பட மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனும் அங்கு சுமந்திரனுடன் இணைந்து கொண்டு அனந்திக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அனந்தி ஜெனிவா விவகாரம் உங்களிற்கு அரசியலாகலாம். எனக்கோ அதுவே வாழ்க்கைப் பிரச்சினை. காணாமல் போன எனது கணவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனேயே அங்கு போனேன் என கூறிய அழுதவாறு உரையினை நிறுத்தி அமர்ந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அனந்தி சசிதரன் 12மணிக்கு சபையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை விடயம் தொடர்பாக அனந்தி சசிதரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, என்னுடைய ஜெனீவா பயணம் குறித்து விமர்சிப்பதற்கான கூட்டம்போன்றே இன்றைய கூட்டம் நடைபெற்றது.நான் கட்சியின் ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றேன்.மேலும் இன்றைய தினம் சபையில் நடைபெற்ற விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றேன். ஆனால் மிக விரைவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படுத்துவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.