பக்கங்கள்

20 ஏப்ரல் 2014

மாணவி பாலியல் வல்லுறவு!

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் வலி.மேற்கு சுழிபுரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மாணவியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்ற மூவர் அவரைத் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினர். இது தொடர்பாக வட்டுக்கோட்டையில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்டு சிறீலங்கா காவல்துறையினர் கடந்த 9 ஆம் திகதி ஒரு இளைஞரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் மல்லாகம் சிறீலங்கா நீதிமன்றில் நீதியாளர் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் தலைமறைவாகியிருப்பதாக தெரியவருகின்றது. அவரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.