பக்கங்கள்

03 ஏப்ரல் 2014

தீவக கரையோரங்களிலும் புதிய காவலரண்கள்!


யாழ்ப்பாணத்தில், தீவக கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தீவகத்தின் புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளிலேயே பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன் இக் காவலரண்களை அமைக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வேலணை அராலி சந்திக்கு அருகில் பாரிய படைமுகாம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியான கண்காணிப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேற்படி செயற்பாடுகளால் தங்களின் சுதந்திரமான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இளைஞர்கள் தொழிலில் ஈடுபடுவதற்குத் தயங்குகின்றனர் என்றும் கடற் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வடமராட்சிக் கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினரால் புதிதாக நூற்றுக்கணக்கான காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.