பக்கங்கள்

04 ஏப்ரல் 2014

முல்லையில் மக்களுக்கு உபதேசம் செய்தார் கோத்தபாய!

மீண்டுமொரு யுத்தம் உரு­வா­வதை தடுப்­ப­தற்­கா­கவே வடக்கில் இரா­ணு­வத்­தினர் நிலை நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். தெற்கில் மூவின சமூ­கமும் ஒன்று பட்டு வாழ்­வ­தைப்­போன்று வடக்­கிலும் மூவின சமூக ஒரு­மைப்­பாட்­டினை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் திட்டம் வெற்­றி­பெற்­றுள்­ளது. கடந்த கால கசப்­பான அனு­ப­வங்­களை மறந்து மக்கள் மகிழ்ச்­சி­யாக வாழ­வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். முல்­லைத்­தீவு பிர­தே­சத்தில் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை பொது­மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது முப்­பது வருட காலம் இலங்­கையில் மிகக் கொடூ­ர­மா­ன­தொரு யுத்தம் இடம்­பெற்­றது. இதன்­போது வடக்கு மக்கள் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டனர். எனினும் விடு­தலைப் புலி தீவி­ர­வா­திகள் அழிக்­கப்­பட்ட பின்னர் இன்று வடக்கில் அமை­தியும் மகிழ்ச்­சியும் நிகழ்­கின்­றது. எனினும் வடக்கில் மீண்­டு­மொரு யுத்தம் ஆரம்­ப­மாகி விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே இன்றும் நாம் இரா­ணு­வத்­தி­னரை வைத்­துள்ளோம். எனினும் இன்று மிகக் குறைந்த அள­வி­லான இரா­ணு­வத்­தி­னரே வடக்கில் உள்­ளனர். இவர்­க­ளினால் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­ட­மாட்­டாது. மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­கா­கவே இன்று வடக்கில் இரா­ணு­வத்­தினர் இருக்­கின்­றனர். அதேபோல் மக்­களும் ஜனா­தி­பதி மீதும் இரா­ணு­வத்­தினர் மீதும் நம்­பிக்கை வைத்து ஆத­ரிக்க வேண்டும். தெற்கில் சிங்­கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ்­வதைப் போல் வடக்­கிலும் மூவின மக்­களும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். இதுவே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் விருப்­ப­மாகும். மேலும் யுத்­தத்தின் போது இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளவும் குடி­ய­மர்த்தும் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம் வெற்­றி­ய­ளித்­துள்­ளது. இடம்­பெ­யர்ந்த மக்­களை குடி­ய­மர்த்தும் திட்­டத்தின் முதற் கட்­ட­மாக 50 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது. தற்­போது அதன் இரண்டாம் கட்­ட­மாக 101 வீடுகள் இரா­ணு­வத்­தி­னரால் நிர்­மா­ணிக்­கப்­பட்டு பொது மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்ட குடி­ய­மர்த்­து­வ­தற்­கான சகல செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இன்று அர­சாங்­கத்­தினால் பல வேலைத்­திட்­டங்கள் இப்­ப­கு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் இடம் பெயர்ந்த மக்­களில் 98% மக்கள் தற்­போது அவர்­களின் சொந்த இடங்­க­ளி­லேயே குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். தவிர்க்க முடி­யாத சில கார­ணங்­க­ளி­னா­லேயே சிலர் வேறு இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். எனினும் இவையும் வெகு­வி­ரைவில் சரி செய்­யப்­பட்டு காணி­களை அவர்­க­ளி­ட­மேயே ஒப்­ப­டைக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். அதே போல் கடந்த கால வடுக்கள் மக்­களின் மனதில் மறை­யாது உள்ளது. எனினும் அவை அனைத்தையும் மறந்து மகிழ்ச்சிகரமானதொரு வாழ்க்கையினை மக்கள் வாழ வேண்டும். இராணுவம் இன்று மக்களுக்கு செய்துவரும் சேவையினையும் பாதுகாப்பினையும் மேலும் தொடர்ந்து செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.