பக்கங்கள்

28 ஏப்ரல் 2014

நாரந்தனை வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

யாழ். ஊர்காவற்துறை, நாரந்தனைப் பகுதியில் கடந்த மாதம், இளைஞர்(18 வயது) ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் அதேயிடத்தைச் சேர்ந்த இருவரை இன்று திங்கட்கிழமை(28)கைதுசெய்யதுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் பிரான்சிஸ் டயஸ் மற்றும் அவரது மகன் டயஸ் ரமன்சன் ஆகிய இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.