பக்கங்கள்

16 ஏப்ரல் 2014

இல்லறம் வேண்டுமாயின் துறவறத்தை துற-ஆயர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்!

யாழ்.குருநகர்ப் பகுதியில் காணமல் போயிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி-கொன்சறிற்றாவின் மரணத்திற்கு நீதிவழங்கக் கோரி இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தத யுவதியின் சடலத்தினை அவருடைய வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக நின்றே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இருப்பினும் மேற்படி ஆர்ப்பாட்டத்தினை அடுத்து ஆயர் இல்லத்தின் நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல எவரும் ஆயர் இல்லத்தில் இருந்து வெளிவரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த யுவதியின் பெற்றோர்கள் ஆயர் இல்லத்தின் வாயிலில் நின்று ஆழுது புலம்பினர்.இல்லறம் வேண்டுமானால் துறவறத்தை விட்டுப்போ, பாவமன்னிப்புக் கொடுக்கும் உனக்கு யார் மன்னிப்புக் கொடுப்பது, வேதத்தை போதிக்க வந்த உனக்கு பெண்துனை தேவையா? என்ற பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர். இதன் பின்னர் யாழில் இருந்து உயிரிழந்த யுவதியின் சடலம் அடக்கம் செய்வதற்காக அவருடைய சொந்த இடமான மண்டைதீவிற்கு தற்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.