பக்கங்கள்

30 ஏப்ரல் 2014

தேவிகனுடன் யார் தொடர்பு?விசாரிக்கவேண்டும் என்கிறார் றொகான்!

றொகான் 
முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தை கோபி முன்னெடுத்திருந்தார் என்று பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்கும் நோக்கில் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட கோபி உள்ளிட்ட மூன்று பேர் அண்மையில் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் கோபி என்பவர் முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தார் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவிற்கு அமைய தேவிகன் என்பவர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் ஓர் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் எனவும், விமானங்கள் தொடர்பிலான நிபுணத்துவ அறிவு கொண்டவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேவிகன் தமிழகத்தில் யார் யாருடன் தொடர்புகளைப் பேணினார் என்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டியது அவசியமானது என ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.