பக்கங்கள்

28 ஏப்ரல் 2014

மக்களிடம் சுருட்டும் ஈ.பி.டி.பி.எப்படி புனிதர்களாக முடியும்?

வன்னியிலிருந்து அகதிகளான எமது மக்களது படகுகளை பறித்து இலங்கை இராணுவம் ஈபிடிபியிடமே கையளித்துள்ளது. இவ்வாறு யுத்த அவலங்களை தாங்கி நிற்கும் மீனவர்களது படகுகளையே சுருட்டும் ஈபிடிபி பின்னர் எவ்வாறு புனிதர்களாக கதைக்கின்றதென கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரான கமலேந்திரன் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.தவராசா வடக்கு மாகாண சபையின் அமர்வில் பங்கு கொண்டு தனது ஆரம்ப உரையினை ஆற்றியிருந்தார். இந்நிலையில்; முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவருக்கு வரவேற்புத் தெரிவித்து உரையாற்றியிருந்தார். க.கமலேந்திரன் தற்போதும் சந்தேக நபராகவே வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை எதற்காக கட்சி நீக்கியது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், எஸ்.தவராசா அனுபம் மிக்கவர் என்றும் எதிர்வரும் காலங்களில் சபை அமர்வுகள் காரசாரம் மிக்கவையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆந்த வகையில் வடக்கு மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வரவேற்புத் தெரிவிப்பதாகவும் அவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஈபிடிபியின் மற்iறைய உறுப்பினரான தவநாதன் தேர்தல் ஆணையாளரே தவராசாவை நியமித்ததுடன் குறித்த படகுகளை யாரிடம் கையளித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்தினால் உரிய பதிலை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அப்படகுகள் ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.