பக்கங்கள்

08 ஏப்ரல் 2014

மலேசிய உதவியுடன் நந்தகோபன் கைதாம்!

வெளிநாடுகளில் இயங்கும்,விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில் இரண்டாம் நிலை தலைவரான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வலையமைப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்தார். தென் கிழக்காசியாவை தளமாக கொண்டு இவர் இயங்கினார். இவரது போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்டு தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லவிருந்தார். நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய தகவல் வாட்டாரமொன்று இலங்கைக்கு தெரியப்படுத்தியது. இலங்கை கேட்டுகொண்டதால் ஈரானிய அதிகாரிகள் நந்தகோபனை தெஹ்ரான் விமான நிலையத்தில் தடுத்தனர். தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படாததனால் இவர் மலேஷியாவிலிருந்து திரும்பிப்போனார். கோலாலம்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்கிய இவரை மலேஷிய அதிகாரிகள் தடுத்து வைத்தனர். இதே சமயம் இலங்கை அதிகாரிகளின் நந்தகோபன் தொடர்பாக மலேஷியா சென்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை கைதுசெய்து இலங்கைக்கு மார்ச்சு மாதம் 6 ஆம் திகதி கொண்டு வந்தனர்.ஷெல் வீச்சினால் காயமடைந்த நந்தகோபான் ஊன்று கோல் உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.