ஊர்காவற்றுறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 11.15 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 2 பிள்ளைகளின் தந்தையான ஊர்காவற்றுறை அயித்தாம்புலத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி வசந்தரூபன் (வயது 29) என்பவரே கைதுசெய்யப்பட்டவராவார். ஊர்காவற்றுறையில் இரும்புக் கடை நடத்திவரும் இவரை இன்று அவரது கடைக்கு வந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்து யாழ்ப்பாணத்துக்குக் கூட்டிச் சென்றனர். கூடவே இவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.