தேசிய பாதுகாப்பு விடயங்களில் வடமாகாண சபை தலையீடு செய்யக்கூடாது என அரசாங்கம் வடமாகாண சபையின் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்க வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றியிருந்தார்.
அந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் வடமாகாண சபையின் நிர்வாகத்திடம் விளக்கம் கோரியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக இன்னமும் எதிர்ப்பு வெளியிடவில்லை என தெரியவருகிறது.
வடமாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் அரச திணைக்களங்கள் அரச நிறுவனங்களினால் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.