மன்னார், தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் (ஏ – 32) பிரதான வீதியோரத்திலிருந்த விநாயகர் சிலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதென்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) காலை முறைப்பாடு செய்ததாக இந்துமத பிரதம குரு ஐங்கர சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டமையை மன்னார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியோரத்தில் பல வருடங்களாக வீற்றிருக்கும் மேற்படி விநாயகப்பெருமானுக்குரிய பூஜை வழிபாடுகளை திருக்கேதீஸ்வர கிராம மக்கள் மேற்கொண்டு வந்தனர். அத்துடன், மேற்படி வீதியூடாக பயணிக்கும் மக்களும் மேற்படி விநாயகப்பெருமானை வழிபட்டுவந்தனர்.
இந்நிலையிலேயே சனிக்கிழமை (05) இரவு இனந்தெரியாதோரினால் மேற்படி விநாயகர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி வீதியூடாகச் சென்ற மக்கள் விநாயகப்பெருமான் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமையைக் கண்டு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.