பக்கங்கள்

12 ஏப்ரல் 2014

எப்பக்கமிருந்தாலும் தமிழர்களை அழிப்பதே சிங்களத்தின் திட்டம்!

கோத்தாவின் புலித் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் தரப்பு மட்டுமல்ல அரச தரப்பிலும் கொல்லப்படுபவர்கள் தமிழர்களாகவே இருக்கவேன்டும் என்பது கோத்தாவின் திட்டம்.ஆகவேதான் கோபி குழுவினை பிடிக்கும் முயற்சியில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ராணுவ அதிகாரியும் ஒரு தமிழர்தான். முதலில் கோபி குழுவை சுற்றிவளைக்கும்போது ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் எனக் கூறிய ராணுவம், கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியும் தமிழர்தான் என்றால் தமது நாடகத்தில் சந்தேகம் வரலாம் என்பதால் உடனடியாகவே ராணுவம் கொல்லப்பட்ட அதிகாரி கோபி குழுவின் சுற்றிவளைப்பில் கொல்லப்படவில்லை என மறுத்தது. ஆனால் இப்போதுதான் உண்மை கசிந்துள்ளது. தற்போதைய ராணுவத்தின் அறிக்கையில் வவுனியா வடக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த இராணுவப் பயிற்சியின் போது தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இராணுவ அதிகாரி ஒருவர்தான் உயிரிழந்துள்ளார். இராணுவத்தின் 7 ஆவது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.கமல்ராஜா என்ற தமிழ் இராணுவ அதிகாரியே உயிரிழந்துள்ளார். பதவியா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நேற்று முன்தினம் இரவே அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படையினரின் குழுவொன்று, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சகபடைச்சிப்பாய் ஒருவர்தான் சுட்டுள்ளார். கொல்லபப்ட்ட குறித்த இராணுவ அதிகாரி கோபி, தேவிகன் ஆகியோர் தொடர்பான விசாரணைகளில் பங்குபற்றியிருந்தவராவார். இந்த தமிழ் இராணுவ அதிகாரியே இது தொடர்பான விசாரணைகளின் போது மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். ஆகவே கோத்தாவின் நாடகம் முடிந்தவுடன் குறித்த ராணுவ அதிகாரியும் கொல்லப்படவேன்டும் இல்லையேல் சிலவேலைகளில் தமது நாடகம் உலகிற்கு கசிந்துவிடும். ஆகவேதான் குறித்த அதிகாரியையும் தமிழராக நியமித்து அவரையும் போட்டுத்தள்ளியுள்ளது கோத்தா கும்பல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.