பக்கங்கள்

27 ஏப்ரல் 2014

கருணாவின் முகத்தை சேதமாக்கிய இனந்தெரியாதோர்!

கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா) பதாதை ஒன்று இனந்தெரியாதவர்களால் கிழித்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாதையில் 'சரித்திர நாயகனே, சமாதான கர்த்தாவே ,தொடரட்டும் உன் அரசியல் பணி' என குறிப்பிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் கருணாவின் முகம் உள்ள பகுதி இனந்தெரியாதவர்களால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.