பக்கங்கள்

24 மே 2010

இலங்கையில் சமாதானம் ஏற்பட கே.பி.பாடுபடுகிறாராம்!


புலிகளின் சர்வதேச தொடர்பாளராக இருந்த, இப்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி இலங்கையில் சமாதானம் ஏற்படப் பாடுபடுகிறார் எனக் கூறியுள்ளார் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதம் குறித்த ஆய்வாளரான ரொஹான் குணரட்ண. கே.பி தற்போது இலங்கையிலுள்ள மற்றும் வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கும், பிற சமூகங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அமைந்து இன ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபடுகிறாராம்.எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் எனக் கேட்டதற்கு தாம் கே.பி ஐச் சந்தித்துள்ளதாக குணரட்ண தெரிவித்தார். "கே.பி இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழர்கள் உட்பட பலரைச் சந்தித்துள்ளார். அவர் அமைதியாகப் பணியாற்றி வருகிறார்" எனவும் மேற்கொண்டு குணரட்ண தெரிவித்துள்ளார். கே.பி ஐ இலங்கை அரசு ஒரு போதுமே சித்திரவதை செய்யவில்லை எனக் கூறியுள்ள அவர், ஒரு நல்ல காரணத்துக்காக அவர் செயல்படும்போது எதற்காக அவரைச் சித்திரவதை செய்து, சிறையில் போடவேண்டும் என்கிறார் குணரட்ண. அதாவது இவர் கூறும் நல்ல காரியம் என்பது என்ன ? இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுவதுதானே ?கே.பி குறித்து பல்வேறு மட்டங்களில் பல கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும், தற்போது சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு இயங்கும், பயங்கரவாதம் குறித்த ஆய்வாளரான ரொஹான் குணரட்ணவின் கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை அரசின் நிகழ்ச்சிநிரலின் கீள் இவர் செயல்படுவதாக மீண்டும் செய்திகள் பரவியிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.