பக்கங்கள்

22 மே 2010

கோரமாக கொல்லப்பட்ட போராளி நாரந்தனையை சேர்ந்தவர்!


சிங்கள படைகளின் கோர வெறி தாண்டவத்தில் வதைகள் செய்யப்பட்டு கோரமாக வெட்டி கொலை செய்யபட்ட இந்த போராளியின் விபரம் நமக்கு கிடைக்க பெற்றுள்ளது .யாழ்ப்பாணம் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கட்டு பாட்டுக்குள் இருந்த காலபகுதியில் இவரது சிறுவயதில் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்து வந்த சிறார் செஞ்சோலையில் இணைந்து கல்வி கற்று வந்தார் .அதன் பின் 1995காலபகுதியில் இலங்கை படைகள் யாழை அபகரிக்க,அங்கிருந்து வன்னி சென்ற இவர் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்று போராளியானார்,முல்லை கலை பண்பாட்டு கழகத்தில் இணைந்து மக்கள் விழிப்புணர்வை ஊட்டும் தெரு வீதி நாடகங்களில் நாடக கலையனாக சிறப்பு பெற்று விளங்கினார்.மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பு பெற்றவராக இவர் விளங்கினார்.பின்னர் ரணில் விடுதலை புலிகளுக்கிடையில் உருவான இரண்டாயிரத்து இரண்டாமாண்டு சமாதான காலப்பகுதியில் வவுனியா செட்டிக்குள பகுதிக்கு அரசியல் துறை பொறுப்பாளராக நியமிக்க பட்டு அரசியல் போராளியாக பணியாற்றி வந்தார் .அந்த பகுதியில் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக மக்களின் கஷ்டங்களில் பங்கெடுத்த போராளியான இவரது சொந்த ஊர் தீவு பகுதிகளில் ஒன்றான நாரந்தனை .இவரது சகோதரன் ஒருவர் மாவீரன் மற்றொருவர் நாட்டு பற்றாளர்,ஒரு கால பகுதியில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்ய பட்ட இவர் கோரமாக வதை செய்ய பட்டு தென்னை மரத்துடன் கட்டி வைக்க பட்டு உடல் பாகம் எங்கினும் வெட்டு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளது சிங்கள படைகள் .கடற்படை மற்றும் தரைப்படைகள் விடுதலை புலிகளிடம் சிறை பிடிக்கபட்ட போது அவர்களை புலிகள் சிறப்பாக பராமரித்து விடுதலை செய்தனர் .ஆனால் இங்கே இந்த போராளிக்கு நடை பெற்ற இந்த கோர சம்பவம் போராளிகளையும் மக்களையும் வெகுவாக பாதித்துள்ளதோடு மீண்டும் தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் எடுத்து போராட வேண்டிய ஒரு நிலையை இவை உருவாக்கும் என இவர் அருகில் இருந்த முன்னால் போராளி ஒருவர் இந்த தகவலை நமக்கு தெரிவித்துள்ளார் .விதையாய் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் போராளிகள் வரிசையில் நீயும் விதையானாய் .உனக்கு எங்கள் வீர வணக்கம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.