பக்கங்கள்

28 மே 2010

ஜெர்மனியில் புலிகலுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கொழும்பில் தமிழ் பெண் கைது!

ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டி வந்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதற்கு எதிராக ஜேர்மனியில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் என கூறப்படுகிறது.



இதன் போது அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை திரட்டி புகையிரதக் கடவைகளை தகர்த்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.



அத்துடன் ஜேர்மனியில் உள்ள இந்திய தூதுவரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் அவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



அவர் சிலாபம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.



தற்போது அவர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.