பக்கங்கள்

28 மே 2010

விஜயின் படங்களால் நஷ்டம்,திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி!


நடிகர் விஜய் நடித்த படங்களை வாங்கி திரையிட்டு நஷ்டமடைந்ததால் விஜய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ‘’2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், பையா, அங்காடித்தெரு ஆகிய மூன்று படங்களால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைத்தது.




விஜய் ரசிகர்களை மட்டுமல்ல; எங்களையும் ஏமாற்றி வருகிறார். தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன.

5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6 வது படம் அவரது சொந்தப்படம். விஜய் நடிக்கும் 50வது படம் வேறு. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம்.



250 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படு தோல்வி அடைந்தது. இப்படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்து ரஜினி, கமல்,டி.ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்துள்ளார்கள்.



அது போல் விஜய்யும் எங்களுக்கு நஷ்ட ஈடு தருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி தரவில்லையென்றால் வரும் ஜூன் மாதம் எங்கள் சங்கம் கூடும். அப்போது, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம்.



விஜய் இனியாவது நல்ல கதைகளில் நடித்து ரசிகர்களுக்கும் எங்களுக்கும் ஏமாற்றம் தர மாட்டார் என்று நம்புகிறோம்’’என்று தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.