பக்கங்கள்

16 மே 2010

துன்னாலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!



44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான நல்லையா பாஸ்கரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்த இவர் காணாமல் போயிருந்தார். சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஆட்களற்ற மயானம் ஒன்றில் நிர்வாண முறையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டுப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமான நிலையில் சடலம் காணப்பட்டது. சடலத்தில் மோசமான அடிகாயங்களும் காணப்பட்டிருந்தன. இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நெல்லியடிக் காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரும் பரபரப்பும் சந்தேகமும் நிரலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.