பக்கங்கள்

29 மே 2010

பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி படைச்சிப்பாய் அழைத்து சென்றுள்ளான்!




முக்கொம்பன் கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.


இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, இலங்கை அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முக்கொம்பன் கிராமத்தில் 10 வது தரம் கல்வி கற்ற கலைமகள் என்ற 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்வார் என்று ஆசைவார்த்தை கூறி சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.


கடந்த மே 18 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தால் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் நிலவுகின்றது.

இராணுவத்தினர் அங்கு தமிழ்மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.