பக்கங்கள்

19 மே 2010

அடுத்த கட்டபோருக்கு தமிழகத்தில் இருந்தும் இளைஞர்கள் களம் செல்வார்கள்!-வைகோ.


முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,​​ இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நே‌ற்று மாலை கண்டனப் ​ பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.​ இக்கூட்டத்தில் பேசிய வைகோ, "இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷ கூறியுள்ளார்.​ இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலை ஒரு இனப் படுகொலை என்று 1983 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.

அவரே,​​ 1984 ஓகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பேசும்போது,​​ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீக பூமி,​​ அது தமிழர்களின் பூமி என்று குறிப்பிட்டார்.​ அத்தகைய பூமியில் தமிழர்களுக்கு ​ உரிமை இல்லை என்று கூறும் ராஜபக்ஷ ஜூன் 8ஆம் திகதி இந்தியா வருகிறார்.​ ராஜபக்ஷவின் ஒவ்வொரு இந்திய வருகையும்,​​ அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும்,​​ இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.​

மேலும், இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போர் இன்னும் முடியவில்லை.​ விரைவிலேயே அடுத்த கட்டப் போர் ​ தொடங்கும்.​ உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்வார்கள்.​ அப்போது தமிழகத்திலிருந்தும் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்ல வாலிபர்கள் தயாராக வேண்டும் என்றும் ஆவேசத்துடன் தமிழக வாலிபர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.​

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.