பக்கங்கள்

25 மே 2010

இரசாயன எரிகுண்டுகளால் கொல்லப்பட்ட பெண் போராளிகள்!சிங்களப் படைகள் புரியும் அராஜகங்கள்,மேலும் ஒரு யுத்தக்குற்ற ஆதாரம்!


இரசாயன எரிகுண்டுகளால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளினது உடலங்கள்இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் போர்க்குற்றம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் குறுகிய காலப்பகுதியில் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்னுமொரு காணொளி இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் மூலமாக வெளியாகியுள்ளது. சர்வதேச போரியல் விதி முறைகளையும், யுத்த தர்மங்களையும் மீறி இரசாயனக் குண்டுகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடலங்கள் எரிகாயங்களுடன் காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இப்போ வெளியாகி கொண்டிருக்கும் புகைப்படங்கள்,காணொளிகள் ஆகியவற்றை கண்டு உலகத்தமிழ் மக்கள் பெரும் கோபமும் சீற்றமும் கொண்டுள்ளார்கள்,அதே நேரம் இவற்றை உரிய இடத்தில் சேர்த்து

மகிந்த கும்பலை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு

தமிழ் மக்களிடமே உள்ளதென்பதும் குறிப்பிடபட வேண்டிய ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.