பக்கங்கள்

27 மே 2010

அரசாங்கம் படைகளின் மூலம் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை கண்டிக்கிறோம்-சந்திரசேகரன்.


சுதந்திரம்,நீதியாக செயற்படுகின்றோம் எனக் கூறும் அரசாங்கம் தமது இராணுவங்கள் மூலம் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் , அடாவடித்தங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக தமது கண்டனத்தை தெரிவிப்பதாக முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றைய தினம் சுமார் 3 மணித்தியாலங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் நாரயணகுரு மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே வீரகேசரி இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அரசாங்கம் பாரிய வெற்றி விழாக்களை கொண்டாடுகிறது.இந்நிலையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனை வலியுறுத்தி சந்திரசேகரன் தலைமையில் கிராண்ட்பாஸ் நாராயண குரு மண்டபத்தில் காணாமல் போனவர்களது உறவினர்களுடனான சந்திப்பு தொடர்பிலேயே இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.