பக்கங்கள்

30 மே 2010

கிளிநொச்சியில் மலசலகூட குழியினுள் சடலங்கள்,மக்கள் பதற்றம்!


கிளிநொச்சி, கணேசபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீளக்குடியேறிய ஒரு குடும்பத்தினர் தமது மலசலக் கூடத்தின் குழிக்குள் பல சடலங்கள் இருப்பதைக் கண்டுள்ளனர். இந்த வீடு ஏ9 சாலையின் மேற்குப்புறமாக 1 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அக்குழிக்குள் 5 சடலங்கள் இருந்ததை அப்பகுதிவாசிகள் கண்டுள்ளனர். ஒவ்வொரு சடலமும் பிளாஸ்டிக் பைக்குள் பொதி செய்யப்பட்டு, அந்தக் குழிக்குள் போடப்பட்டு அதன்மேல் மணல் பரவப்பட்டுள்ளதாக அம்மக்கள் கூறினர். ஆனால் இன்னும் சில சடலங்கள் அங்கு இருக்கலாம் எனவும் அம்மக்கள் கூறியுள்ளனர்.இதையறிந்த இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். எனவே இது குறித்து மூன்றாம் தரப்பொன்று தகுந்த விசாரணைகள் செய்யவேண்டும் என தனது பெயரை வெளிவிடவிரும்பாத மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். ராணுவமும், போலீசும் இச்சம்பவத்தைத் திரித்து, மறைத்துவிட முன்னர் இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் எனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.