பக்கங்கள்

25 மே 2010

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஒபாமா காரணம் கேட்கவேண்டும்!


போஸ்டன் குளோப்பின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் பொதுமக்கள் மீது பெருமெடுப்பில் இலங்கைப் படையினராலும், விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்து வெளியுலகம் நம்பிக்கைக்குரிய குற்றச்சாட்டுகள் பலவற்றைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள போஸ்டன் குளோப், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் எங்கென்றாலும் மனித உரிமைகள் விடயத்தை மென்மையாளக் கையாண்டார் என பலவாறு விமர்சனங்களுக்கு உள்ளான அமெரிக்க அதிபர் ஒபாமா, பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான ஷெல் தாக்குதல்களுக்கும், சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொலை செய்தமைக்கும் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்த விசாரணையானது நீதி, நியாயக் கருத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. இலங்கையில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றால், உள்நாட்டுப் போரைக் கையாளும் பிற நாடுகள் தாம் இலங்கையைப் போலவே செயற்பட்டால் அதற்காக எதுவித பதிலும் சொல்ல வேண்டியதில்லை என்று கருதும் எனவும் போஸ்டன் குளோப் ஆசிரியர் எழுதியுள்ளார்.சர்வதேச போர்க்குற்றங்களை விசாரணை செய்வதானது நீதியை நிலைநாட்டச் செயற்படுவதோடு, ராஜபக்ஷ அரசுக்கும், அங்குள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையிலான சமரச இணக்கத்தையும் மேம்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.