பக்கங்கள்

27 மே 2010

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடுக்கடலில் தமிழர்கள் தத்தளிப்பு!


இந்தோனேசியாவின் யாவா மத்திய மாகாணத்தின் கரையோரத்தில் இருந்து 80 மைல் தொலைவில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஜகர்த்தா போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த தமிழ் ஏதிலிகளை உள்ளூர் மீனவர்கள் கண்டறிந்தனர். அவர்களை கரைக்கு கொண்டுவருவது தொடர்பில் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏதிலிகள் மீனவர்களை கேட்டிருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.