பக்கங்கள்

30 மே 2010

இலங்கையில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா,சல்மான் கான் புறக்கணிப்பு!



இலங்கையில் அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் விளம்பர தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் அமிதாப்பச்சன், இலங்கை விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தனது தூதர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இப்பட விழாவில் இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்பார் என்று படவிழா குழுவினர் அறிவித்திருந்தனர். இலங்கைக்கு எதிரான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிக்கு பாலவுட் குழுவுக்கு ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுவதாக இருந்தது. இந்நிலையில் ஷாருக்கான் அடுத்த மாதம் கொழும்பு நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இப்போது தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானும் இலங்கையில் நடக்கும் இந்திய படவிழாவை புறக்கணித்திருப்பதால், அவரைத் தொடர்ந்து பல இந்தி நடிர்கள், நடிகைகளும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.