பக்கங்கள்

24 மே 2010

தமிழீழத்தின் பிரபல பாடகர் சாந்தன் விடுதலை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார்.இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றும் பொருட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.